"அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களித்துள்ளனர்" - செங்கோட்டையன்

பட மூலாதாரம், KASengottaiyan
அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பல்வேறு சோதனைகளை கடந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு தலைவர் உள்ளார் என்று மக்கள் விரும்புகிற தலைவராக தவெக தலைவர் இருக்கிறார். தமிழகம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு பல பகுதிகளுக்குச் சென்றார் விஜய். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, அவர்தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கின்றனர்.
நாளை தமிழகம் இந்தியாவுக்கு ஒரு வழிகாட்டியாக உருவாவதற்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற வரமாக நான் கருதுகிறேன். உயிர்மூச்சு உள்ளவரை அவரோடு இணைந்து பணிபுரிவேன்” என தெரிவித்தார்.















