தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தாரின் நிலை என்ன?

பட மூலாதாரம், @AadhavArjuna/X
'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிட்டனர். அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நிலவரம்?
மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது அத்தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், தவெக சார்பில் கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

பட மூலாதாரம், Social media
மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில், திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தற்போது அவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திதியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.













